யாழ் வலிகாமம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் பிரபல பாடசாலை ஆசிரியையான இளம் குடும்பப் பெண் ஒருவர் குளிக்கும் காட்சிகள் தவறான பேஸ்புக் பக்கம் ஒன்றில் பதிவிடப்பட்டு பெரும் வைரலாகியுள்ளது. இதனை அறிந்து குறித்த குடும்பப் பெண் மற்றும் கணவர் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளதுடன் பொலிசார் மற்றும் சைபர் குற்றத்தடுப்பு பிரிவு என்பவற்றில் முறைப்பாட்டையும் பதிந்துள்ளனர்.
- Advertisement -
அத்துடன் அந்த வீடியோ காட்சி எடுக்கப்பட்ட கோணத்தில் உள்ள வீடு ஒன்றில் சிறிது நாட்களுக்கு முன் வந்து தங்கியிருந்த கனடாவில் பிரஜா உரிமை கொண்ட 47 வயதாக குடும்பஸ்தர் மீது சந்தேகம் எழுந்து அந்த வீட்டில் வசிக்கும் அந்த குடும்பஸ்தரின் தாய், தந்தையிடம் விசாரணைகள் நடைபெற்றுக் கொண்டுள்ளன. குறித்த வீட்டில் முதியவரர்களான தம்பதிகளே வசித்து வந்துள்ளனர்.
- Advertisement -
இதனால் அந்த வீடியோ எடுத்தது யார் என்று புலனாய்வு விசாரணைகள் மேற்கொண்ட போது அந்த குளியல் காட்சி எடுக்கப்பட்ட நேரத்தில் ஆசிரியையின் வீட்டில் இருந்த நீர் இறைக்கும் மோட்டர் பழுதடைந்ததால் சில நாட்கள் கிணற்றில் குளித்ததாகவும் அந்த நேரத்தில் வீடியோ எடுக்கப்பட்ட கோணத்தில் உள்ள வீட்டில் கனடாவில் இருந்து வந்த குடும்பஸ்தர் வந்து தங்கியிருந்ததாகவும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.இதனையடுத்து வயதான தம்பதிகளிடம் பொலிசார் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
விசாரணைகளின் முடிவில் கனடா குடும்பஸ்தரே அந்த காட்சிகளை எடுத்திருப்பது உறுதிப்படுத்தப்பட்டால் அவரது புகைப்படங்கள் மற்றும் அவரது வீடு தொடர்பான அனைத்து புகைப்படங்கள், வீடியோக்களை நாம் இங்கு வெளிப்படுத்துவோம்