யாழ்.தென்மராட்சி பகுதியல் மேலும் இரு கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருக்கின்றனர். நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை கச்சாய் வீதி கொடிகாமம் பகுதியைச்சேர்ந்த 82 வயதான முதியவர் ஒருவரும், நேற்று (23) சனிக்கிழமை கச்சாய் வீதி சாவகச்சேரிப்பகுதியைச்சேர்ந்த 67 வயதான பெண் ஒருவருமே இவ்வாறு புதிய கொரோனா தொற்றுக்கு உள்ளா கியுள்ளனர்.
- Advertisement -
குறித்த இருவரும் நோய் அறிகுறி தென்பட்டநிலையில் தனியார் வைத்தியசாலையில் மேற்கொண்ட அன்ரிஜன் பரிசோதனையில் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதோடு, பின்னர் சாவகச்சேரி ஆதாரவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெ ற்று வருகின்றனர்.
- Advertisement -
இம் மாத ஆரம்பத்தில் தென்மராட்சியின் கைதடி மற்றும் அல்லாரைப்பகுதிகளைச் சேர்ந்த இருவர் கொரோனா தொற்றுக்கு உள்ளா கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.