புதிய இணைப்பு
விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை எங்களுக்கு எதிரி என்றே எமக்கு தொலைக்காட்சியில் காட்டினார்கள் என்று சிங்கள இளைஞன் ஒருவர் தெரிவித்துள்ளார்.
- Advertisement -
கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை காலி முகத்திடல் போராட்டக்காரர்கள் மீது கொடூரமான முறையில் தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது.
- Advertisement -
இந்நிலையில், அது தொடர்பில் சிங்கள இளைஞன் ஒருவர் காணொளி வெளியிட்டு தனது ஆதங்கத்தை தெரிவித்துள்ளார்.
அதில்,
இங்கிருந்த அமைதியான மக்களை தாக்கினார்கள் என்றால், இந்த ராஜபக்ச அரசாங்கம் வடக்கு, கிழக்கு மக்களை எப்படி நடத்தியிருக்கும். இதனால், வடக்கு, கிழக்கு மக்கள் எம்மீது ஆத்திரம் கொண்டிருப்பது நியாயமானது அல்லவா.
வடக்கு, கிழக்கில் தாக்குதல் நடத்தும் போது, நாம் இங்கு போர் வெற்றி கொண்டாட்டங்களில் ஈடுபட்டிருந்தோம். போர் வெற்றிகளையும் பிரபாகரன் எதிரி என்றே எமக்கு தொலைக்காட்சிகளில் காட்டினர்.
மக்களின் அடிப்படை உரிமை மீறப்பட்டது, வடக்கு, கிழக்கில் சாதாரண மக்களை தாக்கினர் என்று கூறினார்கள். நீங்கள்(படையினர்) இப்படி தாக்கி இருக்க மாட்டீர்கள் என்று எப்படி நாங்கள் தற்போது நம்புவது.
இராணுவத்தினர், முப்படையினரும் வந்து இங்குள்ள( ஜனாதிபதி செயலகம்) சாதாரண மக்களை மோசமாக தாக்கினர். வடக்கு, கிழக்கை புலிகள், விடுதலைப்புலிகள் என பிரித்தனர். இப்போது என்ன சொல்ல போகிறீர்கள். தற்போதாவது தயாராக இருங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
முதலாம் இணைப்பு
தென்னிலங்கையில் இடம்பெறும் அரசியல் விளையாட்டுக்கள் சிங்களவர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியதுடன், தமிழர்கள் தொடர்பான சாதக நிலைப்பாடுகளும் தென்படத் தொடங்கியுள்ளன.
நேற்றையதினம் காலிமுகத்திடலில் கடற்படையின் வெறியாட்டம் சிங்களவர்கள் என்றும் எதிர்பார்க்காத ஒன்றாகும். அங்கிருந்தவர்கள் மீது கடற்படையினர் மிலேச்சத்தனமாக தாக்கப்பட்டதுடன், பலர் கைது செய்யப்பட்டிருந்தனர்.
கடற்படையினர் அட்டகாசம்
இவ்வாறான தாக்குதலின் அடிப்படையில் காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டங்களின் ஒருங்கிணைப்பாளர்களின் ஒருவரான டிலான் சேனநாயக்க வெளியிட்ட தகவல் சிங்கள மக்களை சிந்திக்க வைத்துள்ளது.
ஆர்ப்பாட்டக்களத்திலிருந்து சமூக வலைத்தளம் ஊடாக கருத்து வெளியிடுகையில், “எம்மை இவ்வளவு மோசமாக தாக்குகின்றார்கள் என்றால் தமிழர்களை எவ்வாறு இராணுவத்தினர் தாக்கியிருப்பார்கள்.