எரிபொருள் பெறுவதில் தொடரும் நெருக்கடி நிலையினால் யாழ்.மாவட்ட தனியார் பேருந்துகள் (உள்ளுர்-வெ ளியூர்) நாளை சேவையில் ஈடுபடாதென அறிவிக்கப்பட்டிருக்கின்றது.
- Advertisement -
யாழ்.பிராந்திய கூட்டிணைக்கப்பெற்ற பஸ் கம்பனிகளின் இணைய அலுவலகத்தில் தனியார் பேருந்து சங்கங்களுடன் மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடலுக்குபின்னர் யாழ்.மாவட்ட செயலாளருடன் கலந்துரையாடிய போதும் பேச்சுவார்த்தை தோல்வியிலேயே முடிந்தது.
- Advertisement -
நாளைய தினம் சேவையில் ஈடுபட எரிபொருள் இல்லாததால் முழு தனியார் போக்குவரத்தும் ஸ்தம்பிதமடையும். தூர பேருந்து சேவையும் இடம் பெறாது. பொதுமக்கள் இதனை ஏற்றுக்கொள்ள வேண்டு மென யாழ் மாவட்ட பிராந்திய கூட்டிணைக்கப் பெற்ற பஸ் கம்பனிகளின் இணையத்தின் தலைவர் பொ.கெங்காதரன் தெரிவித்தார்.
கலந்துரையாடலுக்கு பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது யாழ் மாவட்ட பிராந்திய கூட்டிணைக்கப்பெற்ற பஸ் கம்பனிகளின் இணையத்தின் தலைவர் இதனை தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில், இலங்கை போக்குவரத்து சபை சாலைகளில் தனியார் பேருந்துகள் எரிபொருள் பெறும்போது பாரிய பிரச்சினைகள் ஏற்படுகிறது.
தனியார் பேரூந்துகளுக்கு நேற்றும் எரிபொருள் வழங்கப்படவில்லை . நாளையதினம் சேவையில் ஈடுபட எரிபொருள் இல்லாததால் முழு தனியார் போக்குவரத்தும் ஸ்தம்பிதமடையும். தூர பேருந்து சேவையும் இடம்பெறாது. பொதுமக்கள் இதனை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
மாவட்ட செயலர் எரிபொருளை இன்று பெற்றுதர முயற்சித்தபோதும் பலனளிக்கவில்லை. நாளையதினம் எரிபொருள் கிடைத்தால் தொடர்ந்தும் பயணிகள் சேவையில் ஈடுபடுவோம் என்றார்.
நாளையதினம் வடமா காணத்திற்குட்பட்ட தூர பேருந்துகளும் சேவையில் ஈடுபடா தென யாழ்.மாவட்ட தனியார் தூர பேருந்து சங்க தலைவர் விநாயகமூர்த்தி சஜிந்தன் தெரிவித்தார்.