உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டிருத்த தேரர் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதி. காலிமுகத்திடலில் உண்ணாவிரதம் போராட்டத்தில் ஈடுபட்ட தெரிபொஹே சிறிதம்ம தேரர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
- Advertisement -
அரசுக்கு எதிராக காலிமுகத்திடலில் முன்னெடுத்துவரும் போராட்டத்திற்கு ஆதரவாக தெரிபொஹே சிறிதம்ம தேரர் கடந்த 20ஆம் திகதி உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்தார்.
- Advertisement -
இந்த நிலையில் இன்றைய தினம் அவரது உடல்நலம் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.தற்போது மாத்தறை விமலதேவ தேரர் காலிமுகத்திடலில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.