பொலிஸ்மா அதிபரின் செயலகத்தில் இணைந்து சேவையாற்றி வருகின்ற பொலிஸ் அதிகாரி ஒருவரின் மனைவி, மகன் ஆகியோர் கோவிட் வைரஸ் தொற்றுக்கு உள்ளான நிலையில், சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளனர் என்று பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
- Advertisement -
பொலிஸ் அதிகாரியின் புதல்வர் சட்ட மாணவர் என்பதுடன், கோவிட் தொற்றுக்குள்ளான நிலையில், கொத்தலாவல பாதுகாப்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையிலேயே, அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.
- Advertisement -
பொலிஸ் அதிகாரியும் தொற்றுக்கு உள்ளாகியுள்ள நிலையில், அவர் குண்டசாலை பொலிஸ் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். அவரது மனைவி கடந்த வாரம் தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே, சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.