தனியார் வங்கிகளிடம், இறக்குமதிக்கு அவசியமான அந்நியச்செலாவணி கையிருப்பில் ல்லாத நிலையில் இலங்கை உணவுதட்டுப்பாடு தொடர்பில் அவசரநிலையை பிரகடனம் செய்துள்ளது. இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்குண்டுள்ள நிலையில் சீனி அரிசி உட்பட அத்தியாவசிய உணவுப்பொருட்களை பதுக்குவதற்கு எதிரான நடவடிக்கைகளை ஜனாதிபதி அறிவித்துள்ளார்.
- Advertisement -
அத்துடன் நெல் அரிசி சீனி போன்றவற்றின் விநியோகத்தினை ஒருங்கிணைப்பதற்கான அத்தியாவசியசேவைகள் ஆணையாளராக சிரேஸ்ட இராணுவ அதிகாரியொருவரை ஜனாதிபதி நியமித்துள்ளார். சீனி அரிசி வெங்காயம் உருளைக்கிழங்கு போன்றவற்றின் விலை பல மடங்காக அதிகரித்துள்ள நிலையிலும்,
- Advertisement -
பால்மா எரிவாயு போன்றவற்றிற்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலையிலும் தோன்றியுள்ளது. பொருட்களை பதுக்குவதற்கு எதிரான நடவடிக்கைகளை அரசாங்கம் தீவிரப்படுத்தியுள்ளதுடன் அபராதங்களை அதிகரித்துள்ளது.
எனினும் நாளாந்தம் 200 பேரின் உயிரை பலியெடுக்கும் மூர்க்கத்தனமான கொரோனா வைரசிற்கு எதிராக நாடு போராடும் நிலையில் தட்டுப்பாடுகள் உருவாகியுள்ளன. பெருந்தொற்று காரணமாக இலங்லையில் 2020 இல் பொருளாதாரம் முன்னொருபோதும் இல்லாத விதத்தில் 3.36 வீதத்தினால் வீழ்ச்சியடைந்த நிலையில் ,மேலும் அரசாங்கம் மோட்டார் வாகனங்கள் உட்பட பல பொருட்களை இறக்குமதி செய்வதற்கு தடைவிதித்துள்ளது.
எனினும் தாங்கள் கொள்வனவு செய்வதற்கு அனுமதிக்கப்பட்டுள்ள உணவுகள் மருந்துகளை இறக்குமதி செய்வதற்கான டொலர்களை பெற முடியாத நிலையில் உள்ளதாக இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர். இதேவேளை இலங்கையின் வெளிநாட்டு நாணயகையிருப்பு 2019 நவம்பரில் அரசாங்கம் பொறுப்பேற்றவேளை 7.5 பில்லியன் அமெரிக்க டொலாராக காணப்பட்டது,எனினும் ஜூலை மாதத்தில் 2.8 பில்லியன் அமெரிக்க டொலர்களாக குறைவடைந்துள்ளது.
இலங்கை நாணயம் அமெரிக்க டொலரிற்கு எதிரான அதன் பெறுமதியில் 20 வீதம் வீழ்ச்சியடைந்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் எரிபொருட்களை சிக்கனமாக பயன்படுத்துமாறு மோட்டார் வாகனசாரதிகளை அமைச்சர் உதயகம்மன்பில கேட்டுக்கொண்டுள்ளார். இதன் காரணமான அந்நியசெலாவணியை மீதப்படுத்தி மருந்துகள் போன்ற அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்ய முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.