லண்டனில் தமிழ் மக்கள் அதிகம் செறிwது வாழும் ‘ஹரோ’ நகரத்தில் இன்று அதிகாலை இடம்பெற்ற குழு மோதலில் பெண் ஒருவர் உட்பட 5 பேர் படுகாயம் அடைத்துள்ளதாக கூறப்படுகின்றது. இந்தச் சம்பவம் இன்று அதிகாலை 4 மணியளவில் Harrow Civic Centre இற்கு வெளியே இடம்பெற்றுள்ளது.
- Advertisement -
சம்பவத்தில் காயம் அடைந்தவர்கள் கத்திக்குத்து மற்றும் வாள் வெட்டுக் காயங்களுக்கு உள்ளானதாகத் தெரியவருகின்றது. இளைஞர் குழுக்களுக்கு இடையான மோதலின் காரணமாகவே இந்த தாக்குதல் இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் கூறியுள்ளனர்.
- Advertisement -
மேலும் சம்பவத்தில் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.