நாட்டில் அதிகரித்துள்ள கொரோனா தொற்றின் காரணமாக, மேல் மாகாணத்தில் வாகன வருமான அனுமதிப்பத்திரம் வழங்கும் சேவையானது, தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் 12.08.2021 ஆம் திகதி முதல் 31.08.2021 வரையில் குறித்த சேவை தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
- Advertisement -
அத்தோடு, குறித்த காலப்பகுதியில் காலவதியாகும் வாகன வருமான அனுமதிப்பத்திரங்களுக்கு 30.09.2021 வரையில் எவ்வித அபராதமும் வசூலிக்கப்படமாட்டாது எனவும் தெரிவிக்கப்படுகின்றது. மேலும், அவசர தேவை நிமித்தம், www.motortraffice.wp.gov.lk என்ற இணையதளத்தின் மூலம் வாகன வருமான அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.