கொவிட் -19 நோயாளிகளின் அதிகரிப்பு குறித்து தனது முகநூலில் பதிவிட்ட அவிசாவளை மாவட்ட மருத்துவமனை மருத்துவரிடம் சிஐடி நேற்று (15) விசாரணை நடத்தியுள்ளது. டொக்டர் நஜித் இந்திக, நோயாளிகளின் அதிகரிப்பு மற்றும் கொவிட் -19 தொற்று காரணமாக மக்களின் இறப்புகள் தொடர்பில் தனது துயரத்தை மக்கள் ஈக்கள் போல இறந்து கொண்டிருக்கிறார்கள் என்று பதிவிட்டிருந்தமை வைரலாகியது. இந்த நிலையில் குறித்த மருத்துவரின் மனநிலை குறித்து விசாரிக்க உத்தரவிட்டதாக சிஐடி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.