யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு குடத்தனை வடக்கு பகுதியில் சட்டவிரோத மணல் கடத்தலில் ஈடுபட்ட வாகனம் மீது கடற்படையினர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட நிலையில் சந்தேகநபர்கள் தப்பி சென்றுள்ளனர்.
- Advertisement -
இந்த நிலையில் அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பருத்தித்துறை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில் குடத்தனை பகுதியில் கடற்படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது சந்தேகத்திற்கு இடமான முறையில் வீதியில் வந்த வாகனத்தை மறித்துள்ளனர்.
- Advertisement -
அப்போது வாகனம் கடற்படையினரின் கட்டளையை மீறி சென்ற போது கடற்படையினர் துப்பாக்கி பிரயோகம் செய்த போது வாகனத்தில் பயணித்தவர்களும் , வாகனத்திற்கு வழி காட்டியாக சென்றதாக சந்தேகிக்கப்படும் மோட்டார் சைக்கிள் ஒட்டி ஒருவரும் தப்பி சென்றுள்ளனர்.
இதனை அடுத்து குறித்த மற்றும் மோட்டார் சைக்கிள் என்பவற்றை கடற்படையினர் மீட்டதுடன் , பருத்தித்துறை பொலிஸாருக்கு தகவல் வழங்கி நிலையில், சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் வாகனங்களை பொறுப்பேற்றதுடன் தப்பி சென்ற சந்தேக நபர்களை கைது செய்வதற்குரிய நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளனர்.