Times.lkTimes.lk
  • Local News
  • World
  • Cinema
  • Astrology
  • Breaking news
  • Life style
  • Health
Search
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Reading: எமது பிள்ளைகளை எம்மிடம் ஒப்படைக்கும் வரை போராட்டம் தொடரும்- ரி.ஐ.டி விசாரணையில் உறுதியான வாக்குமூலம்!
Share
Aa
Times.lkTimes.lk
Aa
  • Local News
  • World
  • Cinema
  • Astrology
  • Breaking news
  • Life style
  • Health
Search
  • Local News
  • World
  • Cinema
  • Astrology
  • Breaking news
  • Life style
  • Health
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Times.lk > News > எமது பிள்ளைகளை எம்மிடம் ஒப்படைக்கும் வரை போராட்டம் தொடரும்- ரி.ஐ.டி விசாரணையில் உறுதியான வாக்குமூலம்!
News

எமது பிள்ளைகளை எம்மிடம் ஒப்படைக்கும் வரை போராட்டம் தொடரும்- ரி.ஐ.டி விசாரணையில் உறுதியான வாக்குமூலம்!

admin
Last updated: 2021/02/25 at 12:17 PM
admin
Share
1 Min Read
SHARE

எனது மகனை என்னிடம் ஒப்படைக்கும் வரை போராட்டத்தை நான் தொடர்வேன். எமது பிள்ளைகளை எம்மிடம் ஒப்படையுங்கள் போராட்டத்தை கைவிடுகின்றோம் என வடக்கு – கிழக்கு வலிந்து காணாfமல் ஆக்கப்பட்டோர் உறவினர்கள் சங்கச் செயலாளர் லீலாதேவி ஆனந்தநடராஜா பயங்கரவாத விசாரணைப் பிரிவினருக்கு வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

வடக்கு – கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சங்கத்தின் செயலாளர் லீலாதேவி ஆனந்தநடராஜாவை வாக்குமூலம் பெறுவதற்காக கொழும்பு பயங்கரவாத விசாரணைப் பிரிவு அலுவலகத்துக்கு வருகை தருமாறு அண்மையில் அழைப்புவிடுக்கப்பட்டது.

எனினும் அவர் அங்கு செல்லாததால், அவரை பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் கிளிநொச்சிக்கு சென்று, தமது மாவட்ட அலுவலகத்துக்கு நேற்று அழைத்து வாக்குமூலம் பெற்றனர். சுமார் இரண்டரை மணி நேரம் இடம்பெற்ற இந்த விசாரணையின் போதே, லீலாதேவி ஆனந்தநடராஜா மேற்கண்டவாறு தெரிவித்தார்.

விசாரணை தொடர்பில் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,

எனது வங்கிக் கணக்குகளின் விவரங்களை பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் காண்பித்தனர். எமக்கு எங்கிருந்து பணம் கிடைப்பதாகக் கேட்டனர். வெளிநாடுகளிலிருந்து பணம் கிடைக்கின்றனவா? எனவும் வினவினர்.

வீதிகளில் இருந்து போராட்டதை தொடர்வதற்கான காரணத்தையும் அவர்கள் கேட்டனர். எனது பிள்ளையை என்னிடம் ஒப்படைக்கும் வரை போராட்டத்தை நான் தொடர்வேன். எமது பிள்ளைகளை எங்களிடம் ஒப்படையுங்கள் போராட்டத்தை கைவிடுகின்றோம்.

அதுவரை போராட்டத்தை கைவிடமாட்டோம் என்று வாக்குமூலம் வழங்கினேன் என வடக்கு – கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவினர்கள் சங்கச் செயலாளர் லீலாதேவி ஆனந்தநடராஜா கூறினார்.

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
admin February 25, 2021
Share this Article
Facebook Twitter Copy Link Print
Share
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0
Previous Article ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான அறிக்கையில் மூடிமறைக்கப்பட்ட விடயங்கள்! வெளிப்படுத்திய எதிரணி
Next Article கொழும்பு வாழ் பெண்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை!
Times.lkTimes.lk
Follow US

© 2023 Times Media Network | All Rights Reserved.

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?