ஸ்ரீலங்காவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை, முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று அவரது விடுதியில் சந்திப்பதற்கு ஸ்ரீலங்காவிற்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயம் ஏற்பாடு செய்துள்ளது. ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்துடன் கேட்டுக்கொண்டதிற்கிணங்க, அரசியல் விவகாரங்களுக்குப் பொறுப்பான ஆயிஷா அபூபக்கர் இந்த சந்திப்பை உறுதிப்படுத்தினார்.
- Advertisement -

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். இச்சந்திப்பின் போது பலவந்த ஜனாஸா எdgரிப்பு உள்ளிட்ட முஸ்லிம்களின் பிரச்சினைகள் தொடர்பில் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள், இம்ரான்கானுக்கு தெளிவுபடுத்தவுள்ளனர். இந்த சந்திப்பின் மூலம் சமூகத்துக்கு சாதகமான முடிவுகள் கிடைக்க பிரார்த்திப்போம் எனவும் தெரிவித்துள்ளார்.
- Advertisement -
இந்நிலையில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் றிசாட் பதியுதீன் ஆகியோருக்கும் இடையிலான சந்திப்பு, பாதுகாப்பு நிமித்தம் காரணமாகவே ரத்து செய்யப்பட்டதாக அமைச்சரவை பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல்ல நேற்று அமைச்சரவை சந்திப்பில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
