மன்னார் தொடக்கம் காலி ஊடாக அம்பாந்தோட்டை வரை கடற்பகுதிகளிலுள்ள மக்கள் மற்றும் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த கடலோரப் பிரதேசங்களில் கடற்கொந்தளிப்பு ஏற்படுவதால் மீனவர்கள் கடலுக்கு செல்வதை தவிர்த்துக் கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இந்த நிலைமையில் கடலோரங்களிலுள்ள வீதிகளுக்கும் கடல் அலை பெருக்கெடுக்க வாய்ப்பு உள்ளதாகவும் அத் திணைக்களம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.