நாட்டில் டெல்டா வைரஸ் தொற்று பரவ ஆரம்பித்தால் பாரியளவில் நெருக்கடிகளை எதிர்கொள்ள நேரிடும் என தொற்றுநோய்கள் மற்றும் கொவிட் கட்டுப்பாட்டு இராஜாங்க அமைச்சர் சுதர்சினி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.
- Advertisement -
நாடாளுமன்றத்தில் நேற்றைய தினம் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் தொடர்ந்தும் உரையாற்றியதாவது,
- Advertisement -
கொவிட் வைரஸ் பரவல் இலங்கைக்கு மாத்திரம் தாக்கத்தை ஏற்படுத்திய ஒன்றல்ல, இது உலகளாவிய வைரஸ் பரவலாகும். ஆகவே ஏனைய நாடுகள் எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடிகளை நாமும் எதிர்கொண்டு வருகின்றோம்.
சகல துறைகளிலும் நாம் பொருளாதார ரீதியில் நெருக்கப்பட்டுள்ளோம். ஏற்றுமதி மற்றும் தேசிய உற்பத்திகள் மூலமாக சகல வருவாயும் தடைப்பட்டுள்ளது. மத்திய அபிவிருத்தி நாடு என்பதாலேயே இந்த நெருக்கடியை நாம் பெரியளவில் எதிர்கொண்டுள்ளோம்.
அதேபோல் நாடாக இன்று மூன்றாம் கொவிட் அலைக்கு முகங்கொடுத்து வருகின்றோம். முதலாம் அலையில் எமக்கு பெரிய தாக்கம் ஏற்படவில்லை.