கொரோனா தொற்றுக்குள்ளான தாய் குழந்தை பிரசவித்த நிலையில் குழந்தை உயிரிழந்துள்ளதுடன் தாயின் நிலை கவலைக்கிடமாக உள்ளதென சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன.
- Advertisement -
குறித்த சம்பவம் கொட்டகலை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இடம்பெற்றிருக்கின்றது. குறித்த கர்ப்பிணி தாய் லிந்துலை மருத்துவமனையில் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில்
- Advertisement -
இவர் பிரசவித்த சிசு நேற்று உயிரிழந்துள்ளது. இதனையடுத்து தாயின் நிலை மோசமடைந்ததையடுத்து, அவர் மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அங்கு அவருக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.