பயணத்தடை காலப்பகுதியில், நடமாடும் வர்த்தகத்தில் ஈடுபடும் வர்த்தகர்கள் பயன்படுத்தும் தராசுகளை சோதனைக்கு உட்படுத்த விசேட நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.அளவீட்டு அலகுகள், நியமங்கள் மற்றும் சேவைகள் திணைக்களத்தினால் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது.
- Advertisement -
இதன் முதற்கட்ட நடவடிக்கை, பதுளை மற்றும் மஹியங்கனை பகுதிகளை மையப்படுத்தி நேற்று ஆரம்பிக்கப்பட்டது.இதன்போது, பெருமளவான வர்த்தகர்கள், தரமற்ற தராசுகளைப் பயன்படுத்தியமை கண்டறியப்பட்டுள்ளது.
- Advertisement -
நேற்று யாழ்ப்பாணத்திலும் நடமாடும் வர்த்தகர்களிடம் திடீர் சோதனைகள் மேறகொள்ளப்பட்டன.இதன்போது மரக்கறிகளின் விலைகள் தொடர்பில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.