வடக்கு மாகாணத்தில் 3 கட்டங்களாக கண்புரை சத்திரசிகிச்சை முகாம் நடாத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் அனுப்பி வைத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, எதிர்வரும் மே மாதம் வட மாகாண சுகாதார திணைக்களமும், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையும் இணைந்து கண்புரை சத்திர சிகிச்சை முகாங்களை 3 கட்டங்களாக நடத்த தீர்மானித்துள்ளன.
- Advertisement -

எனவே, கண்புரை நோயால் அவதியுறும் நோயாளர்கள் தத்தமது பிரதேசத்துக்கு அருகில் இருக்கும் மாவட்ட பொது வைத்தியசாலைகளிலும் (கிளிநொச்சி, முல்லைத்தீவு,வவுனியா, மன்னார்), பருத்தித்துறை, தெல்லிப்பழை, சாவகச்சேரி, மாங்குளம், புதுக்குடியிருப்பு போன்ற ஆதார வைத்தியசாலைகளிலும், அல்லது யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பதிவுகளை மேற்கொண்டு சத்திர சிகிச்சையைப் பெற முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.