கொழும்பு – பஞ்சிகாவத்தையில் உள்ள சங்கராஜ மாவத்தையில் சமையல் எரிவாயு வெடித்தமையே தீ விபத்து ஏற்பட்டமைக்கு காரணம் என தெரிவிக்கப்படுகின்றது. ஹோட்டல் ஒன்றிலேயே குறித்த சம்பவம் ஏற்பட்டுள்ளது. இதில் பலபிட்டியில் வசிக்கும் 46 வயதுடைய குறித்த உணவகத்தின் சமையல்காரர் இறந்துள்ளதாக மரதானை பொலிஸார் தெரிவித்தனர்.
- Advertisement -

தீயைக் கட்டுப்படுத்த 5 தீயணைப்பு வண்டிகள் வரவழைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.