யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி சென்றுகொண்டிருந்த அதிசொகுசு பேருந்து எரிந்து தீக்கிரையாகியுள்ளது. இச்சம்பவம் மதுரங்குளி பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.
- Advertisement -
43 பயணிகளுடன் சென்றுகொண்டிருந்த அதிசொகுசு பேருந்தே இவ்வாறு எரிந்து தீக்கிரையாகியுள்ளது. எப்படியிருப்பினும் இந்த தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
- Advertisement -
எனினும் தீ விபத்திற்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை. இந்த நிலையில் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்