தெலுங்கானா மாநிலம் ஜனகம மாவட்டம், வெங்கிரியாலாவைச் சேர்ந்த அரவிந்தின் பெற்றோர் சில ஆண்டுகளுக்கு முன் உடல் நலக்குறைவால் இறந்து விட்டனர். இதன் மூலம் அனாதையாக வாழ்ந்து வரும் அரவிந்த், காவேரி என்ற இளம் பெண்ணை ஒருநாள் திடீரென சந்தித்தார்.
- Advertisement -
இந்த அறிமுகம் கொஞ்சம் கொஞ்சமாக காதலாக மாறியது. ஆனால் அவர்களது காதலை இளம்பெண்ணின் பெற்றோர் ஏற்காததால் காவேரி தற்கொலை செய்து கொண்டார்.
- Advertisement -

இதனால் இளம்பெண்ணின் குடும்பத்தினர் அரவிந்த் வீட்டிற்கு சென்று தகராறு செய்தனர். மேலும் அரவிந்த் மீது போலீசில் புகார் கொடுத்தனர். இதனால் மனமுடைந்த அரவிந்த், பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.