யாழ் யுவதிகளின் அழகே கருப்பு தான். ஆனால் வெள்ளைத் தோலின் மீது கொண்ட அதிக மோகத்தால் பலரும் தங்களின் சருமத்தை வெள்ளையாக்க கடைகளில் விற்கப்படும் கண்ட ஃபேர்னஸ் க்ரீம்களை வாங்கிப் பயன்படுத்துகின்றார்கள். அதிலும் விலை கூடுதலாக உள்ள நைட் ஃபேர்னஸ் கிரீம்களை தான் பெண்கள் அதிகம் விரும்புகிறார்கள்.
- Advertisement -
இது போல் ஓர் சுவாரஸ்ய சம்பவம் யாழில் பதிவாகியுள்ளது. ஒரு வாரத்தில் வெள்ளையாக மாறுவதற்கு ஆசைப்பட்டு யாழ் நெல்லியடியை சேர்ந்த 23 வயது யுவதி, கடந்த சில மாதங்களாக கொரீ கிரீம் பாவித்து வந்துள்ளார்.
- Advertisement -
இதற்கிடையில் அவரின் அழகை டிஃட்டோக்ல் பார்த்து மயங்கிய கனடா மாப்பிள்ளை, இவ் யுவதியை திருமணம் செய்வதற்காக agency ஊடாக குறித்த யுவதிக்கு விசா ஏற்பாடு செய்துள்ளார்.
பின்னர் அனைத்தும் கை கூடி வந்த நிலையில், கை ரேகை பதிவிற்காக குறித்த யுவதி கனடா தூதரகத்திற்கு சென்றுள்ளார். அங்கு கைரேகையை பதிவு செய்யும் போது கைரேகை தெளிவின்மையாக காணப்பட்ட காரணத்தால் யுவதி இறுதி நிமிடத்தில் திருப்பி அனுப்பபட்டுள்ளார்.
கைரேகை தெளிவின்மையின் காரணத்தை ஆராய்ந்த போது , நீண்ட நாட்களாக பாவித்து வந்த கொரி கிரீமே அனைத்திற்கும் காரணம் என தெரிய வந்துள்ளது.
அழகின் மோகத்திற்காக உடனடி வெள்ளையாக மாறும் பேராசையால் தமது வாழ்க்கையையும், ஆரோக்கியத்தையும் சில பெண்கள் கெடுத்து கொள்வது மனவேதனைக்குரியது.