மட்டக்களப்பு மாவட்ட செயலக தொழில் நிலையம், மனிதவலு மற்றும் வேலைவாய்ப்பு திணைக்களம் மற்றும் வேலை செயற்பணி குரல்கொடுக்கும் திணைக்களம் ஆகியன இணைந்து மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் கே.கருணாகரனின் ஆலோசனை மற்றும் வழிகாட்டல்களுக்கு அமைவாக ஏற்பாடு செய்துள்ள 2022 ஆம் ஆண்டிற்கான மாபெரும் தொழிற் சந்தையொன்று எதிர்வரும் சனிக்கிழமை (10) திகதி மட்டக்களப்பு மகாஜன கல்லூரியில் மிகப் பிரமாண்டமான முறையில் இடம் பெறவுள்ளது.
- Advertisement -
அன்றைய தினம் மு.ப. 09.00 மணி முதல் இடம்பெறவுள்ள மாபெரும் தொழிற்சந்தையில் பல தொழில் வழங்கும் தனியார் நிறுவனங்கள் வருகை தரவுள்ளதுடன் அத்தினத்தில் வருகை தந்து தொழிலொன்றை பெற நாடுவோர் இதில் பங்குபற்றி பயன்பெற முடியும்.