மல்வான வல்கம பிரதேசத்தில் உள்ள வீடு ஒன்றில் குளியலறையில் 10 வயதான பாடசாலை மாணவி ஒருவர் நீராடியதனை இரகசியமாக காணொளி செய்தார் எனக் கூறப்படும் 37 வயதான ஒருவர் பியகம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
- Advertisement -
சிறுமி குளிப்பதற்கு குளியலறைக்குச் சென்றபோது, சந்தேக நபர் குளியலறையின் ஜன்னல் மூலம் தனது கைத்தொலைபேசியில் அவரை காணொளி எடுத்துள்ளார்.
- Advertisement -
சம்பவத்தை கண்ணுற்ற சிறுமியின் உறவினர் ஒருவர் பொலிஸில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேகநபர் கையடக்க தொலைபேசியுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதான சந்தேக நபர் புலத்கொஹுபிட்டிய பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்டவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.