குளியாபிட்டிய அபலதெனிய பிரதேசத்தில் தனது ஐந்து வயது மகனின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டிய தந்தை கைதுசெய்யப்பட்டுள்ளார்.
- Advertisement -
வெளிநாட்டில் உள்ள தனது மனைவியை அழைத்து வரும் நோக்கில் தனது பிள்ளையை ஆபத்தான நிலையில் வைக்கும் காணொளி காட்சியை வெளியிட்ட நபரே பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
- Advertisement -
இது தொடர்பான காணொளியை சந்தேக நபர் தனது மனைவிக்கும், மனைவி வெளிநாட்டில் இருந்த நிறுவனத்திற்கும் அனுப்பி வைத்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்தக் காணொளியில், மிகவும் பயந்துபோன நிலையில் இருந்த குழந்தை பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளதுடன், குழந்தையின் பாட்டியையும் பொலிசார் கைது செய்துள்ளனர்.
இடிக்கப்படவிருந்த வீடொன்றுக்கு சென்று இந்தக் காணொளி பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
சந்தேக நபர் குழந்தையின் கழுத்தில் கூரிய ஆயுதத்தை வைத்து கொலை மிரட்டல் விடுத்துள்ளதுடன், விரைவில் திரும்பி வருமாறு மனைவியிடம் கூறியுள்ளார்.
அந்தக் குழந்தை மீண்டும் தன்னை தந்தையிடம் ஒப்படைக்க வேண்டாம் என பொலிஸாரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குழந்தையின் வாக்குமூலங்கள் பெறப்பட்டு, கைது செய்யப்பட்ட குற்றவாளி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.