முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அண்மையில் நாடு திரும்பவுள்ளார். இந்த நிலையில் அவர் விரும்பினால் தொடர்ந்தும் அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட முடியும் எனவும் அதற்கு பக்க பலமாக தாம் இருப்போம் எனவும் முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
- Advertisement -
தற்போது சிங்கப்பூரில் தங்கியுள்ள முன்னாள் ஜனாதிபதியின் வீசா காலம் எதிர்வரும் 14 ஆம் திகதியுடன் முடிவுக்கு வருவதாகவும் தான் இலங்கைக்கு வரும்போது தனக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
- Advertisement -
இதேவேளை முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச சிங்கப்பூரில் தங்கியிருப்பதற்கு மேலும் 14 நாட்கள் அனுமதி வழங்குமாறு அரசாங்கம் அனுமதி கோரியுள்ளதாக தென்னிலங்கை ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.