“சிறைச்சாலைகளில் அப்பாவிகள் தடுத்துவைக்கப்பட்டிருந்தால் அவர்கள் விரைவில் விடுதலை செய்யப்படுவார்கள். இது அரசியல் கைதிகளுக்கும், அரசியல் பழிவாங்கல் நடவடிக்கையால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் பொருந்தும்.”
- Advertisement -
இவ்வாறு நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச தெரிவித்தார்.அரசியல் கைதிகள் விவகாரம் தொடர்பில் ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
- Advertisement -
“அரசியல் கைதிகள் தொடர்பில் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் எம்மிடம் முன்வைக்கும் கோரிக்கைகளை நாம் சாதகமாகப் பரிசீலிப்போம்” என்றும் அவர் மேலும் கூறினார்.