அரசாங்கத்திற்கு எதிராக மக்களால் கொழும்பு காலிமுகத்திடல் பகுதியில் இடம்பெற்றுவரும் தன்னெழுச்சி போராட்ட களத்திற்கு நேற்றையதினம் அதிகாலை திடீரென உள்நுழைந்த இராணுவம் மற்றும் விசேட அதிரடிப் படையினர் அங்கிருந்த ஆர்ப்பாட்ட காரர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளதோடு அங்கிருந்த கூடாரங்களும் பிடுங்கி எறியப்பட்டன.
- Advertisement -
இந்நிலையில் நேற்றையதினம் முழுவதும் அங்கு பெரும் பரபரபப்பான நிலை உருவானது. இவ்வாறான நிலையில் நேற்றையதினம் இரவு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் காலிமுகத்திடல் வீதித் தடைகளுக்கு முன்னால் நின்றவாறு கிரிகெட் விளையாட்டில் ஈடுபடும் புகைப்படங்கள் தற்போது சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகின்றது.