யாழ். மாவட்டத்தில் தற்போது எரிபொருள் விநியோகம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.சில இடங்களில் மக்கள் வாகன இலக்கத் தகட்டின்படி வரிசையில் நிற்கின்ற போதிலும் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பெட்ரோல் முடிந்து விட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
- Advertisement -
இந்த நிலையில் எரிபொருள் விநியோகத்தை சீராக மேற்கொள்ளும் வகையில் இன்றையதினம் யாழ்.மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன. அவை தொடர்பான விபரங்களை யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் அறிவித்துள்ளார்.