யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர், வைத்தியர் த. சத்தியமூர்த்தி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தி அது தொடர்பான விரிவான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் யாழ். போதனா வைத்தியசாலை கிளைச்சங்கம் வலியுறுத்தியுள்ளது.
- Advertisement -
தற்போது வெளிநாட்டு கற்கையை தொடரும் அவர் விரைவில் யாழ். போதனா வைத்தியசாலையில் பணியில் இணையவுள்ளார்.
- Advertisement -
அவர் மீதான குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யாமல் அவர் யாழ். போதனா வைத்தியசாலையில் பணியில் இணைக்கப்பட்டால் தொடர் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடப் போவதாக குறித்த சங்கம் அறிவித்துள்ளது.
தாய் சங்கத்திற்கு இது தொடர்பான கடிதம் ஒன்றையும் குறித்த சங்கம் அனுப்பி வைத்துள்ளது. தாய் சங்கம் அந்தக் கடிதத்தை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்கு அனுப்பி வைத்துள்ளது.