தேவையில்லாத மிருகத்தனத்தை பிரயோகிக்க எமது நாட்டிற்கும், நாட்டின் மீதான சர்வதேச பிம்பத்திற்கும் உதவாது என இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சாலிய பீரிஸ் கூறியுள்ளார்.
- Advertisement -
தற்போது கொழும்பு – காலிமுகத்திடலில் அரசாங்கம் முன்னெடுத்துள்ள நடவடிக்கை குறித்து அவர் வெளியிட்ட விசேட செய்திக்குறிப்பில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
- Advertisement -
அதிபர் செயலகத்திற்கு அருகிலுள்ள காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக பல சட்டத்தரணிகள் என்னிடம் கூறியுள்ளனர்.
நுவான் போபேகே உட்பட பலர் கைது செய்யப்பட்டதாகவும் மக்கள் தாக்கப்பட்டதாகவும் அறியக் கிடைக்கிறது.
துறைசார் அதிகாரிகள் அனைவரின் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும் என்பதுடன், கைது செய்யப்பட்டவர்கள் இருக்கும் இடத்தை தெரியப்படுத்த வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதேவேளை, தான் காவல்துறை மா அதிபரைத் தொடர்பு கொள்ள முயற்சித்ததாகவும், இராணுவத் தளபதிக்கும் தகவல் அனுப்பியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்க நேற்று பதவியேற்றுள்ள நிலையில், கடந்த 100 நாட்களுக்கும் மேலாக போராட்டம் நடத்துபவர்களை அகற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.