இலங்கைக்கு செல்ல வேண்டாம்
பிரித்தானியா, சிங்கப்பூர், அவுஸ்திரேலியா மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகளின் பிரஜைகள் அத்தியாவசிய காரணங்களைத் தவிர இலங்கைக்கு செல்ல வேண்டாம் என அந்த நாடுகள் அறிவித்துள்ளன.
- Advertisement -
நாட்டின் பயண ஆலோசனைகளை புதுப்பித்து, இலங்கையில் வன்முறை போராட்டங்கள் காரணமாக பாதுகாப்பு நிலைமை மோசமாக இருப்பதாக அந்த நாடுகள் தெரிவித்துள்ளன.
- Advertisement -
எனவே, இலங்கைக்கு விஜயம் செய்வதற்கு முன்னர் தமது பிரஜைகள் இருமுறை சிந்திக்குமாறு அறிவுறுத்தியுள்ளன.
இதேவேளை, வேறு பல வெளிநாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள், இலங்கையில் இருந்தால் அங்கிருந்து விரைவில் வெளியேறுமாறு தாய் நாடுகளினால் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.