இலங்கையின் தற்போதைய பதில் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாகும் கனவோடு காத்திருக்கும் நிலையில் அவர் ஜனாதிபதி ஆனால் நாட்டில் தொடர்ந்தும் குழப்பகரமான சூழலிலே நிலவும் என மக்கள் எழுச்சி கட்சியின் தலைவர் அருள் ஜெயந்திரன் தெரிவித்தார்.
- Advertisement -
நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை கொக்குவில் அமைந்துள்ள அவரது கட்சி அலுவலகத்தில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
- Advertisement -
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டில் 90 நாட்களுக்கு மேலாக ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சபை பதவி விலக கோரியும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவையும் பதவி விலகக் கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
இத்தொடர்புராட்டத்தின் எதிரொலியாக ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ தனது பதவியை நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை ராஜினாமா செய்வதாக சபாநாயகர் ஊடாக அறிவித்துள்ளார்.
இந்நிலையில் பிரதமராக பதவி வகித்த ரணில் விக்கிரமசிங்க பதில் ஜனாதிபதியாக பிரதம நீதியரசர் முன்னிலையில் பதவியேற்றுள்ளார்.