புதிய ஜனாதிபதி ஒருவரை நியமிக்கும் வரை ரணில் விக்ரமசிங்கவே ஜனாதிபதியாக பதவி வகிக்க வேண்டும் என சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
- Advertisement -
சிங்கள ஊடகம் ஒன்றிடம் அவர் இதனை கூறினார். கோட்டாபய ராஜபக்சவின் பதவி விலகலை, சபாநாயகர் இன்று உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.
- Advertisement -
இதன்படி, புதிய ஜனாதிபதி ஒருவரை நியமிக்கும் வரை ரணில் விக்ரமசிங்கவே ஜனாதிபதியாக பதவி வகிக்க வேண்டும்.
மேலும் பிரதமரின் பணிகளை மேற்பார்வையிட அமைச்சர் ஒருவரை நியமிக்க வேண்டும் எனவும் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் படுகொலையின் பின்னர் வெற்றிடமான ஜனாதிபதி பதவிக்கு அப்போதைய பிரதமர் டி.பி.விஜேதுங்க நியமிக்கப்பட்டார்.
அதன்படி அப்போது சபைத் தலைவராக இருந்த ரணில் விக்ரமசிங்க பிரதமராக நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.