இலங்கையில் இன்று மாலைக்குள் அந்நிய நாட்டு இராணுவத்தை தரையிறக்கும் முயற்சியொன்று மேற்கொள்ளப்படுவதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிப்பதாக பரபரப்பு தகவலொன்று வெளியாகியுள்ளது.
- Advertisement -
குறித்த முயற்சி பெரும்பாலும் வெற்றி பெற்றால் தற்போதைய அரசாங்கத்தின் ஆட்சி கவிழ்க்கப்படும் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.
- Advertisement -
அத்துடன், தற்போதுள்ள போராட்டக்காரர்களும் இரும்புக் கரம் கொண்டு அடைக்கப்படுவார்கள் என குறித்த தகவல்கள் தெரிவித்துள்ளன.
இதேவேளை, அந்நிய இராணுவம் இலங்கைக்குள் புகுந்தால் மீண்டும் நாடு இனவாத சக்திக்குள் சிக்கிக் கொள்ளும் என மேலும் அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
எனினும் எந்த நாட்டின் இராணுவம் இலங்கைக்குள் நுழையபோகின்றது என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.