ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இன்னமும் ஜனாதிபதி பதவியிலிருந்து விலகவில்லை என அவர் சபாநாயகருக்கு அனுப்பிய கடிதம் மூலம் தெரியவந்துள்ளது.
- Advertisement -
‘ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டிலிருந்து வெளியேறியுள்ளமையால் அரசியலமைப்பின் 37(1) சரத்தின் பிரகாரம் பதில் ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க நியமிக்கப்படுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய சபாநாயகருக்கு அறிவித்துள்ளார்.
- Advertisement -
இதன்படி, கோட்டாபய ராஜபக்ச நாட்டை விட்டு வெளியேறியுள்ள நிலையில் அரசியலமைப்பின் பிரகாரம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியின் கடமைகளை பொறுப்பேற்றுள்ளதாக சபாநாயகர் மகிந்த யாபா அபேவர்தன சற்றுமுன் தெரிவித்திருந்தார்.
தற்போதைய பொருளாதார நெருக்கடி காரணமாக ஜனாதிபதி மற்றும் பிரதமர் இருவரையும் பதவி விலகுமாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரி வரும் நிலையில் கொழும்பின் பல பகுதிகளில் இன்று ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறுகின்றன.
ஜுலை 09 ஆம் திகதி இடம்பெற்ற மக்கள் எழுச்சியை அடுத்து, இன்று தனது பதவி விலகல் கடிதத்தை கையளிப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச சபாநாயகரிடம் அறிவித்தார்.
இருப்பினும், தனது பதவி விலகல் தொடர்பில் எவ்வித அறிவிப்பும் இன்றி அதிபர் இன்று அதிகாலை தனது குடும்பத்தினருடன் மாலைதீவுக்கு சென்றுள்ளார்.
இந்நிலையில், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை தனது கடமைகளை நிறைவேற்றுவதற்கு பதில் ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ச நியமித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.