உண்டியல் முறையில் பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்ட ஒருவரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.
- Advertisement -
குறித்த நபர் பொரலஸ்கமுவ-பெப்பிலியான பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
- Advertisement -
இதன்போது, உண்டியல் முறையில் பரிமாற்றுவதற்கென வைத்திருந்த 50,000 யூரோ பணமும் அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளது.
குறித்த யூரோ தொகையின் இலங்கை பெறுமதியானது, 18.69 மில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் கைதானவர் பொரளை பகுதியைச் சேர்ந்த 53 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.