இந்திய கடன் திட்டத்தின் கீழ் இறக்குமதி செய்யப்படும் அரிசியை சதொச மற்றும் பல்பொருள் அங்காடிகள் மூலம் சலுகை விலையில் நுகர்வோருக்கு விற்பனை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார்.
- Advertisement -
சதொச ஊடாக மாத்திரம் வழங்கப்படும் அரிசியை பல்பொருள் அங்காடிகளுக்கு வழங்கும் பட்சத்தில் சலுகை விலையில் அரிசியை விற்பனை செய்ய முடியும் என பல்பொருள் அங்காடிகளின் உரிமையாளர்கள் உறுதியளித்துள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.