ஒவ்வொருவரினதும் கோரிக்கைக்காக பதவி விலகப் போவதில்லை என பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். அரசாங்கத்திற்கு எதிராக நாடு முழுவதிலும் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டங்கள் தொடர்பில் தெற்கு ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிடுகையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
- Advertisement -
மேலும் கூறுகையில், ஆளும் கட்சியில் அங்கம் வகித்த சில அமைச்சர்கள் கூட விலகி இன்று விமர்சனம் செய்து வருகின்றனர். இந்த விடயம் தொடர்பில் கடும் மனவேதனை அடைந்துள்ளேன்.
- Advertisement -
நாட்டின் பொருளாதார நெருக்கடி நிலைமை காரணமாக மக்கள் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். இதனாலேயே பதவி விலகுமாறு கோரப்படுகிறது.
இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண முயற்சிக்கப்படும். பதவிகளை விட்டு விலகாது தீர்வுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.