நிட்டம்புவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹொரகொல்ல எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் நேற்றிரவு இடம்பெற்ற கொலை சம்பவம் தொடர்பான சில காட்சிகள் சிசிடிவி கமராவில் பதிவாகியுள்ளன.
- Advertisement -
எரிபொருளைப் பெற வந்த மோட்டார்சைக்கிள் ஓட்டுநரான உயிரிழந்த இளைஞர் எரிபொருள் நிரப்புவது உள்ளிட்ட அவரின் இறுதி நிமிடங்கள் பதிவாகியுள்ளன.
- Advertisement -
இதேவேளை சம்பவத்தையடுத்து அங்கிருந்து தப்பியோடியதாக கூறப்படும் முச்சக்கரவண்டி சாரதி தற்போது கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் குறித்த சம்பவத்தில் கொழும்பு 14 பகுதியை சேர்ந்த 28 வயதுடைய இளைஞரே உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ள நிலையில், சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.