தற்போது வெள்ளித்திரையில் சினிமாவில் நடிக்கும் நடிகர் நடிகைகளை காட்டிலும் சின்னத்திரையில் வெளியாகும் தொடர்களில் மற்றும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் நடிக்கும் நடிகர் நடிகைகள் தான் மக்கள் மத்தியில் பலத்த பிரபலத்தை அடைவதோடு தனி ரசிகர் பட்டாளமே வைத்துள்ளனர் எனலாம்.
- Advertisement -
அதிலும் சின்னத்திரையில் பிரபல தொலைக்காட்சியான சன் டிவியில் வெளியாகும் தொடர்களுக்கு என்றே மக்களிடையே தனி ரசிகர் கூட்டமே உள்ள நிலையில் இந்த தொடர்களை மக்கள் மத்தியில் அறிமுகபடுத்தியதோடு தொடர்ந்து பல முன்னணி சீரியல்களை ஒளிபரப்பி வருகிறது. இந்நிலையில் இந்த சேனலில் ஒளிபரப்பாகி வரும் ரோஜா சீரியலில் கதையின் நாயகியாக நடித்து மக்களிடையே பலத்த பிரபலத்தை பெற்றவர் பிரபல நடிகையான பிரியங்கா நல்காரி.
- Advertisement -
இவர் இந்த தொடர்களில் நடிப்பதற்கு முன்னரே தெலுங்கில் கடந்த 2010-ம் ஆண்டு வெளிவந்த அந்தாரி பந்து வையா எனும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார் மேலும் பல படங்களில் நடித்துள்ள இவர் ராகவா லாரன்சின் காஞ்சனா படத்திலும் நடித்துள்ளார். இவ்வாறு தொடர்கள் மற்றும் படங்களில் நடித்து பிரபலமாக இருக்கும் பிரியங்கா பல வருடங்களாக பிரபல முன்னணி சீரியல் நடிகரான ராகுலை காதலித்து வந்துள்ளார்.
இதனைதொடர்ந்து கடந்த 2018-ம் ஆண்டு இருவீட்டார் சம்மதத்துடன் நிச்சயதார்த்தம் முடிந்தது இந்நிலையில் நிச்சயம் முடிந்தகையோடு மலேசியாவுக்கு தனது வேலை காரணமாக சென்ற ராகுல் பல மாதங்கள் ஆகியும் எந்த தொடர்பும் இல்லாமல் இருப்பதோடு அங்கேயே ஒரு பெண்ணை பார்த்து காதலித்து திருமணமும் செய்து கொண்டுள்ளார்.
இவ்வாறு இருக்கையில் பிரியங்கா அவர் சென்றதில் இருந்து பலமுறை அவரை போனில் தொடர்பு கொள்ள நினைத்தும் அதற்கு எந்த பலனும் இல்லாத வர என்னை ஏமாற்றி விட்டார் என அழுது புலம்பி உள்ளார். சிலகாலம் தொடர்கள் படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்த பிரியங்கா தற்போது மீண்டும் தொடர்களில் நடிப்பதிலேயே தனது முழுகவனமும் இருக்கபோகிறது என கூறியுள்ளார்.
இப்படி இருக்கையில் பிரியங்காவும் அவரது முன்னாள் காதலருமான ராகுலும் இணைந்து நெருக்கமாக எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமீபத்தில் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் சின்னதிரையினர் மத்தியில் வைரளாகி வருகிறது .