தனது தந்தையின் மரணம் தொடர்பில் வெளிநாட்டிலுள்ள மகள் சந்தேகம் தொிவித்த நிலையில் சடலத்தின் மீது நடத்தப்பட்ட உடற்கூற்று பரிசோதனையில் மாரடைப்பே மரணத்திற்கு காரணம் என உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது.
- Advertisement -
சம்பவம் தொடர்பில் மேலும் தொிவிக்கப்பட்டுள்ளதாவது, மீசாலை வடக்கை சேர்ந்த முன்னாள் கிராம சேவகரான 86 வயதுடைய முதியவர் அண்மையில் உயிரிழந்துள்ளார். அவருடைய மரணத்தில் சந்தேகம் உள்ளதாக வெளிநாட்டிலுள்ள மகள் சந்தேகம் வெளியிட்டிருந்தார்.
- Advertisement -
இதனடிப்படையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் உடற்கூற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருந்தது. இதன்போது மாரடைப்பினாலேயே அவர் உயிரிழந்தார். என உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது.