வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு வரும் நபர்களுக்காக நடைமுறைப்படுத்தப்படும் தனிமைப்படுத்தல் விதிமுறை தொடர்பிலான புதிய சுகாதார வழிகாட்டி வெளியாகியுள்ளது.
- Advertisement -
இது தொடர்பான சுற்றறிக்கை, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் கையொப்பத்துடன் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
- Advertisement -
இலங்கையில் இருக்கும் போது கோவிட் தொற்று ஏற்பட்டால், வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் செலவை ஈடுகட்ட வேண்டும் என்று சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும், முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட பெற்றோருடன் வரும் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் கோவிட் பரிசோதனையில் இருந்து முற்றிலும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.