வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா மக்கள் வரிப்பணத்தில் பெருமளவு நிதியை செலவிடுகின்றார் என்பதை தகவலறியும் உரிமைச்சட்டம் ஊடாக நிரூபிக்க முடியும் எனவும் கூறியுள்ள சிவாஜிலிங்கம் முடிந்தால் தன்னுடன் விவாதத்திற்கு வருமாறும் ஆளுநருக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
- Advertisement -
யாழ். ஊடக மையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவுக்கு 14 மெய்ப்பாதுகாவலர்களும் 6 சாரதிகளும் காணப்படுகின்றனர்.
- Advertisement -
அவர்களுக்காக பல இலட்சம் ரூபாய்கள் செலவிடப்படுகிறது. அத்துடன் ஆளுநர் ஜீவன் தியாகராஜா தனது எரிபொருள் மற்றும் டீசேர்ட் கொள்வனவிற்காகவும் பல இலட்சம் ருபாவை மக்களின் வரிப்பணத்தில் இருந்து செலவிடுகின்றார்.
இவற்றினை தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் வெளிப்படுத்துவோம். அல்லது பகிரங்க விவாதத்திற்கு ஆளுநர் தயாரா? எனவும் சிவாஜிலிங்கம் கேள்வியெழுப்பினார்.
அதேவேளை ஆளுநர் நிகழ்ச்சிகளுக்கு வருவதற்கு பெருமளவு பாதுகாப்பு கெடுபிடிகள் இடம்பெறுகின்றதாக தெரிவித்த சிவாஜிலிங்கம், ஆளுநரின் உயிருக்கு ஆபத்து உள்ளதா என்றும் கேள்வியெழுப்பினார்.
மேலும் யாழ் ஆரிய குளத்தில் மத சின்னங்களை புகுத்த ஆளுநர் ஜீவன் தியாகராஜா முயற்சிப்பாராக இருந்தால், ஆரிய குளத்தை நாம் இறந்தவர்களின் அஸ்த்தி கரைக்கும் இடமாக மாற்றுவோம் எனவும் சிவாஜிலிங்கம் இதன்போது கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.