யாழ். போதனா வைத்தியசாலையில் மலேரியா நோயாளியொருவர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளார். இவ்வாறு அடையாளம் காணப்பட்ட நபருக்கு பிளாஸ்மோடியம் பல்சிபரம் என்ற மூளை மலேரியாவினை ஏற்படுத்தும் கிருமி தொற்று இனங்காணப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
- Advertisement -
இந்நபர் தென்னாபிரிக்காவில் இருந்து அண்மையில் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்தவர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. யாழ்.போதனா வைத்தியசாலையில் இனங்காணப்பட்ட மூன்றாவது மலேரியா நோயாளி இவரென்பது குறிப்பிடத்தக்கது.