இலங்கையில் கொரோனா தொற்றின் காரணமாக மூடப்பட்டுள்ள சகல பாடசாலைகளையும் மீள ஆரம்பிக்கும் வேலைத்திட்டத்துக்கமைய, அதன் இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் நாளை ஆரம்பமாகவுள்ளன. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.
- Advertisement -
இலங்கையில் கொரோனா தொற்றின் தாக்கம் குறைவடைந்த நிலையில் கடந்த மாதம் முதல் கட்டமாக 200 குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இரண்டாம் கட்டமாக தரம் 10,11,12 மற்றும் 13 ஆகிய வகுப்புக்களின் கல்வி நடவடிக்கை நாளை ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.
- Advertisement -
சுகாதார வழிகாட்டி ஆலோசனைகளுக்கு அமைவாக மாணவர்களை, பாடசாலைகளுக்கு அனுப்புவது பெற்றோரின் பொறுப்பாகும் என்று அவர் கூறியுள்ளார். மாணவர்களும் ,இதுதொடர்பில் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஆரம்பப் பிரிவுகளைக் கொண்ட பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் தற்போது வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுவதாக கூறிய அவர், சுகாதார அமைச்சின் அனுமதி கிடைத்தவுடன் தரம் 6 இலிருந்து 9 வரையான வகுப்புக்ககளை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.