சீனா முழுவதும் பரவ ஆரம்பித்துள்ள புதிய கோவிட் அலையை கட்டுப்படுத்துவது சிரமமாக இருப்பதாக சீன சுகாதார துறையினர் தெரிவித்துள்ளனர். சீனாவில் 31 மாகாணங்களில் 19 மாகாணங்கள் முழுவதும் கோவிட் 19 புதிய அலை பரவியுள்ளது.
- Advertisement -
இந்த புதிய கோவிட் அலைக்கு காரணம் டெல்டா மற்றும் டெல்டா பிளஸ் வைரஸ் திரிபுகள் என கூறப்படுகிறது. கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவின் ஹூஹான் பிராந்தியத்தை மையமாக கொண்டு கோவிட் 19 வைரஸ் பரவல் ஆரம்பித்தது.
- Advertisement -
அப்போது இந்த வைரஸ் குறித்த சரியான புரிதல் இல்லாத காரணத்தினால், அதனை கட்டுப்படுத்துவது சிரமமாக இருந்த்து. இதன் காரணமாகவே ஆயிரக்கணக்கான தொற்றாளர்களும் மரணங்களும் ஏற்பட்டதாக சீன சுகாதார துறையினர் தெரிவித்துள்ளனர்.