பௌர்ணமி விடுமுறை காரணமாக நாடளாவிய ரீதியில் அனைத்து மதுபான விற்பனை நிலையங்களும் இன்றைய தினம் மூடப்பட்டிருக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை மதுவரி திணைக்களம் அறிவித்துள்ளது. இதன்படி, இன்றைய தினம் நாடளாவிய ரீதியில் மதுபான விற்பனை நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளது.
- Advertisement -
இதேவேளை , குறித்த விதிமுறைகளை மீறி செயற்படுபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை முன்னெடுக்கப்படுமென மதுவரி திணைக்களம் மேலும் அறிவித்துள்ளது.