பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்ட பின்னர், பணிப் பகிஷ்கரிப்புக்களில் ஈடுபடும் வடமேல் மாகாண ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களுக்கு நவம்பர் மாத சம்பளம் வழங்கப்படாது என மாகாண ஆளுநர் ராஜா கொல்லுரே (Raja Kollure)தெரிவித்துள்ளார்.
- Advertisement -
கொரோனா தொற்றை அடுத்து மூடப்பட்ட பாடசாலைகளில் 200 ற்கும் குறைந்த மாணவர்களை கொண்ட பாடசாலைகளின் கல்விச் செயற்பாடு நாளைய தினம் (21) ஆரம்பமாகவுள்ளது. இந்த நிலையிலேயே வடமேல் மாகாண ஆளநர் மேற்படி அறிவித்தலை விடுத்துள்ளார்.
- Advertisement -
கல்வி அமைச்சரின் அதிகாரங்களை நடைமுறைப்படுத்தும் பொறுப்புள்ள நபர் என்ற விதத்தில், பாடசாலைகளுக்கு சமுகமளிக்காத ஆசிரியர்களுக்கு சம்பளத்தை வழங்காதிருக்க தீர்மானித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபடும் அதிபர்கள் ஆசிரியர்களை பாடசாலைக்குள் அனுமதிக்க இடமளிக்கப் போவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
இவ்வாறு பகிஷ்கரிப்பில் ஈடுபடும் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்.