இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவாக்சின் தடுப்பூசிக்கு உலக சுகாதார நிறுவனத்தின் அவசரகால அங்கீகாரம் இன்னும் வழங்கப்படவில்லை. இதனால் கோவாக்சின் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் வெளிநாடு செல்வதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது.
- Advertisement -
கோவாக்சின் தடுப்பூசிக்கு அவசரகால அங்கீகாரம் கேட்டு, பாரத் பயோடெக் நிறுவனம் உலக சுகாதார நிறுவனத்திற்கு விண்ணப்பித்தது. மேலும், கோவாக்சின் தடுப்பூசியின் ஒப்புதலுக்குத் தேவையான தரவுகளைப் பாரத் பயோடெக் நிறுவனம், கடந்த ஜூலை 19 திகதி உலக சுகாதார நிறுவனத்திற்கு சமர்ப்பித்தது.
- Advertisement -
இந்த நிலையில், கடந்த ஐந்தாம் திகதி கூடிய உலக சுகாதார நிறுவனத்தின் ‘நோயெதிர்ப்பு தொடர்பான நிபுணர்களின் மூலோபாய ஆலோசனைக் குழு’ கூட்டத்தில் கோவாக்சின் தடுப்பூசிக்கு அவசரக்கால அங்கீகாரம் வழங்குவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து உலக சுகாதார நிறுவனத்தின் தொழில்நுட்ப ஆலோசனைக் குழு, வரும் 26ஆம் திகதி கூடி கோவாக்சின் தடுப்பூசிக்கு அவசரக்கால அனுமதி வழங்குவது குறித்து ஆலோசிக்கவுள்ளது. அதுவரை கோவாக்சின் தடுப்பூசிக்கு அவசரகால அங்கீகாரம் இன்றும் வழங்கப்படவில்லை எனவும் உலக சுகாதார நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.